​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுவாணி அணை விவகாரம் - கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

Published : Jun 19, 2022 7:04 PM



சிறுவாணி அணை விவகாரம் - கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

Jun 19, 2022 7:04 PM

சிறுவாணி திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்கக்கோரி முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பினராயி விஜயன் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென என தெரிவித்துள்ளார்.