​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதுவுமே இல்லாத கடையை ஏன் பூட்டினாய் ? கல்லாப்பெட்டி காலியாக இருந்ததால் விரக்தி அடைந்த திருடன் எழுதிய மடல்

Published : Jun 19, 2022 5:53 PM



எதுவுமே இல்லாத கடையை ஏன் பூட்டினாய் ? கல்லாப்பெட்டி காலியாக இருந்ததால் விரக்தி அடைந்த திருடன் எழுதிய மடல்

Jun 19, 2022 5:53 PM

கேரள மாநிலம் வயநாட்டில், எதுவுமே இல்லாத கடையை ஏன் பூட்டி வைத்து விட்டு சென்றாய் என எழுதி வைத்து விட்டு சென்ற திருடனை போலீசார் கைது செய்தனர்.

10-ந் தேதி இரவு, 2 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய விஸ்வராஜ் என்ற அந்த திருடன் மூன்றாவதாக துணிக்கடை ஒன்றின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளான்.

கல்லாப்பெட்டி காலியாக இருந்ததால் விரக்தி அடைந்த விஸ்வராஜ், எதுவுமே இல்லாத கடையை பூட்டி வைக்காமல் இருந்திருந்தால் கண்ணாடி கதவாவது தப்பி இருக்குமே என எழுதி வைத்து விட்டு சென்றான்.

கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.