​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் - ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு

Published : Jun 19, 2022 5:13 PM

கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் - ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு

Jun 19, 2022 5:13 PM

சென்னையில் கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் விவரங்களையும் தனியார் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.