​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீசில் புகாரளித்தவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் : வாகனத்தை அடித்து உடைத்து சேதம்

Published : Jun 19, 2022 5:02 PM

போலீசில் புகாரளித்தவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் : வாகனத்தை அடித்து உடைத்து சேதம்

Jun 19, 2022 5:02 PM

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, ஜாமீனில் வெளியே வந்த 3 நபர்கள் தங்கள் மீது புகாரளித்த நபரின் வீட்டிற்குள் கத்தியுடன் புகுந்து மிரட்டல் விடுத்தனர்.

கடந்த மாதம், இடப்பிரச்சணை காரணமாக நந்தகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் செந்தில் நாதன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்த 3 பேர் நேற்று நந்தகுமாரின் வீட்டிற்கு வந்து ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியுடன், அவரது பாட்டியையும் கத்தியால் தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.