​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல் அலையில் சிக்கிய சறுக்கு வீரர்.. ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல் கொடுத்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

Published : Jun 19, 2022 1:44 PM

கடல் அலையில் சிக்கிய சறுக்கு வீரர்.. ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல் கொடுத்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

Jun 19, 2022 1:44 PM

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடல் அலையில் சிக்கிய ஒற்றைப்படகில் பயணித்த வீரர், தனது ஆப்பிள் வாட்ச் மூலம் சமிக்ஞை கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிட்னியின் பால்மோரல் எனும் இடத்தில், படகை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென வீசிய பலத்த காற்றில் அவர் சிக்கி கொண்டார்.

உடனே தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்துகால தகவல் கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டரில் விரைந்த சென்ற மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்த வீரரை பத்திரமாக மீட்டனர்.