​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொட்டும் பனியில் உற்சாக ஆட்டம் போட்ட பக்தர்கள்.. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்..!

Published : Jun 19, 2022 6:53 AM

கொட்டும் பனியில் உற்சாக ஆட்டம் போட்ட பக்தர்கள்.. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்..!

Jun 19, 2022 6:53 AM

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள குருதுவாரா ஹேம்குந்த் சாகிப் அருகே பனி மூடிக்கிடக்கிறது. சில்லென்ற குளிர்ச்சியான சூழலில் கொட்டும் பனியில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிக் களித்தனர்.

பனிமழை கொட்டுவதால் பக்தர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி குருதுவாரா நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து கோவிந்த் காட் பகுதிக்கு பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே உத்தரகாண்ட்டில் கொட்டும் மழையைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கேதார் நாத் ஆலயத்தில் தரிசனம் செய்ய காத்திருந்தனர்.