​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருதுவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு ..பிரதமர் மோடி கண்டனம்..!

Published : Jun 19, 2022 6:46 AM

குருதுவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு ..பிரதமர் மோடி கண்டனம்..!

Jun 19, 2022 6:46 AM

காபூலில் குருதுவாரா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்த்தே பர்வான் குருதுவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டார். வெடிகுண்டுகள் நிரம்பிய காரைத் தடுத்து நிறுத்திய வாயிற்காவலர் உயிரைக் கொடுத்து தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்தார்.

துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, பக்தர்கள் பாதுகாப்புக்காக இறைவனை வேண்டுவதாகத் தெரிவித்துள்ளார்.