​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செகந்தராபாத் வன்முறை.. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.!

Published : Jun 18, 2022 6:32 PM

செகந்தராபாத் வன்முறை.. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.!

Jun 18, 2022 6:32 PM

செகந்தராபாத் ரயில் நிலையத்தில் தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்டோரைத் தெலங்கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிறப்புக் குழுக்களை அமைத்துத் தேடி வருகின்றனர்.

பல்நாடு மாவட்டத்தின் பல இடங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்குப் பயிற்சி மையம் வைத்துள்ள சுப்பாராவ் என்பவரை ஆந்திரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செகந்தராபாத் வன்முறைக்கு இவர் சதித்திட்டம் தீட்டியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால் இவரை ரயில்வே காவல்துறையிடம் ஆந்திரக் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.