​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாக்குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை...திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிக்களுக்கு குளிக்கத் தடை!

Published : May 22, 2022 10:19 AM

கன்னியாக்குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை...திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிக்களுக்கு குளிக்கத் தடை!

May 22, 2022 10:19 AM

திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடரும் மழையினால், பேச்சிப்பாறை அணையிலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கோதையாற்றில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கினால், திற்பரப்பு அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறைக்காக வந்த சுற்றுலாபணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்,  ஏமாற்றத்துடன் சென்றனர்.