​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

Published : May 22, 2022 7:58 AM



தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

May 22, 2022 7:58 AM

விருதுநகரில் தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இயந்திரங்கள், எண்ணெய் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவருக்குச் சொந்தமான கோகிலா எண்ணெய் ஆலையில் நேற்றிரவு 9 மணி அளவில் திடீர் என தீ பிடித்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் 6 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சிவகாசியில் இருந்து சிறப்பு நுரை நகர்வு ஊர்தியும் வரவழைக்கப்பட்டது . தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.