​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இரு சக்கர வாகனங்களை திருடிய மர்ம நபர்கள்.. பூட்டை லாவகமாக உடைத்து திருட்டு..!

Published : May 22, 2022 7:37 AM



ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இரு சக்கர வாகனங்களை திருடிய மர்ம நபர்கள்.. பூட்டை லாவகமாக உடைத்து திருட்டு..!

May 22, 2022 7:37 AM

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மறைமலை நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளார்.  அப்போது அங்கு வந்த 2 பேர் அவரது இருசக்கர வாகன பூட்டை லாவகமாக உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.

அதே பாணியில் பெரிய செங்குன்றம் பகுதியிலும் 2 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.  முகலிவாக்கத்தில் கொரியர் டெலிவரி செய்யும் நபரின் டெலிவரி பேக்கை திருடி சென்ற  நபர்கள் இந்த வாகனத்திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.