​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மாணவர் விசா பெற முயன்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் கைது.!

Published : May 21, 2022 9:52 PM

சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மாணவர் விசா பெற முயன்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் கைது.!

May 21, 2022 9:52 PM

சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மாணவர் விசா பெற முயன்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் என்ற பகுதியைச் சேர்ந்த கர்ணம் சாய் திலீப் என்ற அந்த இளைஞர், அமெரிக்கா சென்று கல்வி பயில வேண்டி சமர்ப்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் போலியானவை என்பதை தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறையின் மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கர்ணம் சாய் திலீப் கைது செய்யப்பட்டார்.