​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் ஆத்தூர் அருகே புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து பலி.!

Published : May 21, 2022 9:28 PM

சேலம் ஆத்தூர் அருகே புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து பலி.!

May 21, 2022 9:28 PM

சேலம் ஆத்தூர் அருகே புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.

வடக்குகாடு பகுதியை சேர்ந்த 19 வயதான மனோஜ்குமார், ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர் சனிக்கிழமை, தனது வீட்டிற்கு அருகே ஆசைத்தம்பி என்பவரது விவசாய கிணற்றில் சுற்றுச்சுவர் பகுதியில் அமர்ந்திருந்த புறாவை பிடிக்க படிக்கட்டுகள் வழியே இறங்கி சென்றுள்ளார். அப்போது கால் இடறி உள்ளே விழுந்த அவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினர் மீட்ட அவரது உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.