​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் பக்தர்கள்.!

Published : May 21, 2022 8:08 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் பக்தர்கள்.!

May 21, 2022 8:08 PM

கோடை விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இலவசத் தரிசனத்துக்காக 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

திருமலையில் உள்ள 24 காத்திருப்பு அறைகளும் நிரம்பியதால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் பக்தர்கள் தரிசனம் செய்ய 30 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ளதால் ஒருவருக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.