​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேர் கைது.!

Published : May 21, 2022 7:51 PM

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேர் கைது.!

May 21, 2022 7:51 PM

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட எல்லையான சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் வாகன சோதனையில் இருந்த போலீசார், அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, காரின் சீட்டுக்கு அடியில் அடியில் சாக்கு பைகளில் ஒன்றே கால் அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட ஏழு தலை நாகத்தின் மேல் நிற்கும் விநாயகர் சிலைகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து மைசூருக்கு சிலைகளை கடத்தி சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது.