​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐதரபாத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை.!

Published : May 21, 2022 6:30 PM



ஐதரபாத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை.!

May 21, 2022 6:30 PM

தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

கொல்சாவாடி என்ற பகுதியைச் சேர்ந்த நீரஜ் பன்வர் என்ற அந்த இளைஞரும் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சஞ்சனா குடும்பத்தினரின் மிரட்டலை மீறி,  கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தம்பதிக்கு 3 மாத குழந்தை உள்ள நிலையில், நீரஜ் பன்வர் மீது  சஞ்சனா குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். நேற்றிரவு கடைத்தெருவில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நீரஜ் பன்வரை இடித்துக் கீழே தள்ளிய மர்ம கும்பல், பலர் முன்னிலையில் அவரை சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்திக் கொன்றது.