​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் நடந்துச் சென்ற காவலரின் மனைவியிடம் செயின் பறித்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Published : May 21, 2022 6:01 PM

சாலையில் நடந்துச் சென்ற காவலரின் மனைவியிடம் செயின் பறித்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

May 21, 2022 6:01 PM

மதுரை வில்லாபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

எம்.எம்.சி காலனியைச் சேர்ந்த காவலரான முத்துராமலிங்கம் என்பவரது மனைவி முத்து, நேற்றிரவு தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், கழுத்தில் அணிந்திருந்த 27 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

முத்து, கத்தி கூச்சலிட்டதால் உறவினர்கள் அந்த பைக்கை துரத்திச் சென்ற போது, சிறிது தூரத்தில் கொள்ளையர்களின் பைக் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது தங்க செயினுடன் இருவர் தப்பிய நிலையில், ஆகாஷ் என்ற இளைஞன் சிக்கிக் கொண்டான்.