போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு - அமைச்சர் சிவசங்கர்!
Published : May 12, 2022 7:13 PM
போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கத் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில், 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அமைச்சர் சிவசங்கர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 2 சதவித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என குறிப்பிட்டார்.