​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு வேலை வாங்கி தருவதாக 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்!

Published : May 12, 2022 4:44 PM

அரசு வேலை வாங்கி தருவதாக 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்!

May 12, 2022 4:44 PM

அரசு வேலை வாங்கி தருவதாக 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜியிடம் கூறி வேலைவாங்கித் தருவதாக அவரது உதவியாளரான சுதாகரன் தெரிவித்ததாகவும், இதனால் அரசு வேலைக்கு முயற்சித்தவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை தான் பெற்று கொடுத்ததாகவும், பல ஆண்டுகளாக வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தியதாகவும் சண்முக நாதன் என்பவர் புகாரளித்தார்.

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது பணம் கொடுத்ததாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் சுதாகரன் மற்றும் அவரது மனைவியிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.