​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

Published : May 12, 2022 2:54 PM

தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

May 12, 2022 2:54 PM

தமிழ்நாட்டில் வருகிற 14ஆம் தேதியன்று சேலம், கோவை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 28 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்தப் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.