​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அலுவலர் கைது.. உளவுத் தகவல் கொடுத்ததற்காகப் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது..!

Published : May 12, 2022 12:59 PM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அலுவலர் கைது.. உளவுத் தகவல் கொடுத்ததற்காகப் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது..!

May 12, 2022 12:59 PM

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் இந்திய விமானப்படை அலுவலர் ஒருவரை டெல்லிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விமானப்படையின் ஆவண அலுவலகத்தில் பணியாற்றும் தேவேந்திர சர்மாவைச் சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் மூலம் ஐஎஸ்ஐ அமைப்பு பொறியில் சிக்க வைத்ததாகவும், அவரிடம் இருந்து விமானப்படையின் ரகசியத் தகவல்களைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தேவேந்திர சர்மா மனைவியின் வங்கிக் கணக்கில் சந்தேகப்படும்படியான பணப் பரிமாற்றங்கள் உள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மே ஆறாம் நாள் அவரைக் கைது செய்த டெல்லிக் காவல்துறையினர் அலுவலக ரகசியக் காப்புச் சட்டப்படி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.