​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆலையில் திருட முயன்றதை தடுக்க வந்த போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற 4 பேர் கைது..!

Published : May 12, 2022 11:43 AM

ஆலையில் திருட முயன்றதை தடுக்க வந்த போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற 4 பேர் கைது..!

May 12, 2022 11:43 AM

கடலூரில் மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டை தடுக்க முயன்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் தானே புயல் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. எனினும் இந்த தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள், காப்பர் கம்பிகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

இந்த பொருட்கள் அடிக்கடி திருடு போவதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும் கும்பல் ஒன்று திருட வந்ததோடு, தடுக்க வந்த போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது.

சம்பவம் குறித்து 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரை கைது செய்துள்ளதோடு, 6 பேரை தேடி வருகின்றனர்.