சீனா குவாங்டோங் மற்றும் ஹுனான் மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
யாங்ஜியாங் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மழை நீடித்துவரும் நிலையில், கூடுதலாக தேசிய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெள்ளக் கட்டுப்பாடு பணிகளுக்கு தேவையான அவசர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி உள்ள பெண்கள், குழந்தகள் உள்ளிட்டோர் ரப்பர் படகு உள்ளிட்டவைகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.