​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவிட் தொடர்பான சர்வதேச மாநாடு -இன்று பிரதமர் மோடி உரை

Published : May 12, 2022 6:29 AM

கோவிட் தொடர்பான சர்வதேச மாநாடு -இன்று பிரதமர் மோடி உரை

May 12, 2022 6:29 AM

கோவிட் தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று நோயைத் தடுப்பது, தயார் நிலையை முதன்மைப்படுத்துவது என்ற தலைப்பில் சர்வதேச அரங்கில் கோவிட் பாதிப்புகளும் தற்போதைய சூழ்நிலையும் விவாதிக்கப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, கொரோனா பேரிடர் ஏற்படுத்திய சவால்கள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை பகிர உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.