​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துவிட்டு சென்னைக்கு தப்பிய நபரை ஓடும் ரயிலில் மடக்கி பிடித்த ரயில்வே போலீசார்..!

Published : May 11, 2022 4:20 PM



கேரளாவில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துவிட்டு சென்னைக்கு தப்பிய நபரை ஓடும் ரயிலில் மடக்கி பிடித்த ரயில்வே போலீசார்..!

May 11, 2022 4:20 PM

கேரளாவில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ரயில் மூலம் சென்னைக்கு தப்பி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவனை ரயில்வே போலீசார் ஓடும் ரயிலில் வைத்து கைது செய்தனர்.

எர்ணாகுளத்தில் இருந்து தப்பி வந்த அந்த நபர் குறித்த அடையாளங்களை சென்னை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கேரளா போலீசார் அனுப்பி வைத்தனர். 

அதன் அடிப்படையில், எர்ணாக்குளத்தில் இருந்து சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில், பெரம்பூர் - எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை செய்தனர்.

அதில் பயணம் செய்த பிஸ்வாத்ஜி சர்கார் என்ற அந்த நபரை பிடித்து கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.