​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்.!

Published : May 11, 2022 3:16 PM

சாலை விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்.!

May 11, 2022 3:16 PM

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மூளை சாவடைந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம் ரேணுகுண்டாவை சேர்ந்த 52 வயதான ரமேஷ் பாபு என்பவர், கடந்த 8ஆம் தேதி சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி மூளை சாவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்ததையடுத்து, இருதயம், சிறுநீரகம், கண்கள், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. 

அவரது இருதயம், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் , கல்லீரல் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகமும் இரண்டு கண்களும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும்  வழங்கப்பட்டன.