​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாரடைப்பால் காலமான மாஸ்ட்ரோ ஷிவ்குமார் சர்மாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய அரசு அறிவிப்பு

Published : May 11, 2022 6:56 AM

மாரடைப்பால் காலமான மாஸ்ட்ரோ ஷிவ்குமார் சர்மாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய அரசு அறிவிப்பு

May 11, 2022 6:56 AM

மும்பையில் காலமான இசைமேதை மாஸ்ட்ரோ ஷிவ்குமார் சர்மாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.

சந்தூர் கருவியை வாசிப்பதில் புகழ்பெற்ற 84 வயதான ஷிவ்குமார் சர்மா மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தமது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் காலமானார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி, மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷிவ்குமார் சர்மாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.