சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகளுக்கு தடைவிதிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்.ஏ. புரத்தில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இடத்தை காலி செய்வதற்கான நோட்டீசை சம்மந்தப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவை நீர்த்துப்போக செய்ய அனுமதிக்க முடியாது என்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்ய போதுமான நேரம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், உரிய பாதுகாப்பை பயன்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தாவிட்டது.