​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் அடித்துக்கொலை-ரவுடி உட்பட 5 பேர் கைது

Published : May 10, 2022 7:12 PM

பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் அடித்துக்கொலை-ரவுடி உட்பட 5 பேர் கைது

May 10, 2022 7:12 PM

புதுச்சேரியில் பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்த ஷேக் திப்பு சுல்தான், தனது நண்பர்களான கெஸ்தான், சாரம் சிவா ஆகியோரிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சிவா, கெஸ்தான் இருவரும் ரௌடிகள் 5 பேருடன் சேர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திப்புசுல்தானை வழிமறித்து கடத்திச்சென்று, இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்த போலீசார், 2 பேரை தேடி வருகின்றனர்.