​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்துக்காக வளர்ப்பு தந்தையை காதல் கணவனோடு சேர்ந்து கொலை செய்த இளம் பெண்

Published : May 10, 2022 4:11 PM



சொத்துக்காக வளர்ப்பு தந்தையை காதல் கணவனோடு சேர்ந்து கொலை செய்த இளம் பெண்

May 10, 2022 4:11 PM

மதுரையில் சொத்துக்காக வளர்ப்பு தந்தையை கணவனோடு சேர்ந்து கொலை செய்த இளம் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தல்லாகுளத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த கிருஷ்ணாராம் என்பவரின் வளர்ப்பு மகள் நிவேதா, வீட்டைவிட்டு வெளியேறி ஆட்டோ ஓட்டுநரான ஹரிஹரன் என்பவனை திருமணம் செய்துள்ளார்.

சொத்தில் பங்கு கேட்டு கிருஷ்ணாராம் கொடுக்காததால், கணவன் மற்றும் அவனுடைய நண்பனுடன் சேர்ந்து நிவேதா வளர்ப்பு தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.