​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விளம்பர பேனர் வைக்க முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி.!

Published : May 10, 2022 3:50 PM

விளம்பர பேனர் வைக்க முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி.!

May 10, 2022 3:50 PM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மேனகா நகரில் மழையால் சரிந்து விழுந்த விளம்பர பேனரை மீண்டும் பொருத்த முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்பனை தொடர்பான பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

கனமழையால் நேற்றிரவு பேனர் சரிந்து விழுந்த நிலையில், அந்த குடியிருப்பின் காவலாளி செல்லதுரை மற்றும் பெயிண்டர்கள் சேட், விமல்நாத் ஆகிய 3 பேர் இன்று அதனை தூக்கி நிறுத்த முயன்றுள்ளனர்.

அப்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி, உயரழுத்த மின்கம்பியின் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் செல்லதுரை மற்றும் சேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விமல்நாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.