செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை...சாலையில் சாய்ந்து விழுந்த மரங்கள்..!
Published : May 10, 2022 2:43 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை...சாலையில் சாய்ந்து விழுந்த மரங்கள்..!
May 10, 2022 2:43 PM
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூறாவளி போன்று காற்று வீசியதில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராட்டிண கிணறு பகுதி வரை உள்ள சாலைகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்ததால் அங்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.