​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆபத்தான முறையில் பரிசல் மூலம் ஆற்றை கடந்து வரும் மக்கள்..!

Published : May 10, 2022 12:12 PM

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆபத்தான முறையில் பரிசல் மூலம் ஆற்றை கடந்து வரும் மக்கள்..!

May 10, 2022 12:12 PM

ஈரோடு மாவட்டம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு,  கல்லாம்பாளையம் உள்ளிட்ட வன கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டுள்ளது.