​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அசானி புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை நிறுத்தம்.!

Published : May 10, 2022 12:07 PM

அசானி புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை நிறுத்தம்.!

May 10, 2022 12:07 PM

அசானி புயல் எதிரொலியால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவின் விசாகபட்டினத்திற்கு வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. அதேபோல, சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத், விசாகபட்டினம், ஜெய்பூர், மும்பை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக விமான நிலைய ஆணையரகம் கூறியுள்ளது.