​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

Published : May 10, 2022 7:26 AM

சென்னை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

May 10, 2022 7:26 AM

சென்னை விருகம்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

வேம்புலி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவரின் 4 வயது மகன் ஹரிஹரன், வீட்டு பணிப்பெண்ணுடன் குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தில் விழுந்துள்ளான்.

நீரில் மூழ்கிய சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.