​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழி கண்டுபிடிப்பு

Published : May 10, 2022 7:19 AM

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழி கண்டுபிடிப்பு

May 10, 2022 7:19 AM

ஜம்மு-காஷ்மீரில் இரு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிட பதுங்கு குழியை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தகேத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான Poonch மற்றும் Rajouri ஆகியவற்றில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தேடுதல் குழுவினர்  பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த நிலையில், அந்த பதுங்கு குழியிலிருந்து 100 வெடி மருந்துகள், உணவுப் பொருட்கள், காலணிகள், டார்ச் ஆகியவற்றை கைப்பற்றினர்.