​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பஞ்சாபில் உளவுத்துறை அலுவலகத்தில் கையெறி குண்டுவீச்சு

Published : May 10, 2022 6:55 AM

பஞ்சாபில் உளவுத்துறை அலுவலகத்தில் கையெறி குண்டுவீச்சு

May 10, 2022 6:55 AM

பஞ்சாப் மாநில காவல்துறையின் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மொஹாலியில் உள்ள மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு  மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசி வீட்டு தப்பியோடினர். கையெறி குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த கையெறி குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அலுவலகத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் கூறப்படுகிறது.