​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் தனியார் மதுபானக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

Published : May 10, 2022 6:42 AM

புதுச்சேரியில் தனியார் மதுபானக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

May 10, 2022 6:42 AM

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் இயங்கி வந்த தனியார் மதுபான கடைக்கு நேற்றிரவு வந்த 3பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று மது அருந்திவிட்டு சென்ற அதே பகுதியை சேர்ந்த 3 பேர் மதுபோதையில் சப்ளையர் சசிக்குமாரிடம் பில் கட்டாமல் சண்டையிட்டு அவரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கியது தெரிய வந்துள்ளது.