​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published : May 10, 2022 6:32 AM

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

May 10, 2022 6:32 AM

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம்,  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அசானி புயல் எதிரொலியால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.