​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் மருந்தகத்தில் கருக்கலைப்புக்காகக் காத்திருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட மருத்துவக் குழுவினர்.!

Published : May 09, 2022 6:26 PM

கடலூரில் மருந்தகத்தில் கருக்கலைப்புக்காகக் காத்திருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட மருத்துவக் குழுவினர்.!

May 09, 2022 6:26 PM

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு செய்து, பெரம்பலூரைச் சேர்ந்த பெண் உயிரிழக்கக் காரணமான ஓம் சக்தி மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட மருத்துவக் குழுவினர், மற்றொரு மருந்தகத்தில் கருக்கலைப்புக்காக காத்திருந்த ஒரு பெண்ணை மீட்டனர். 

மருத்துவக் குழுவினர் ஆய்வுக்கு வருவதை அறிந்து, மருந்தகத்தை நடத்தி வந்த குமார் - சித்ரா தம்பதி பின்வாசல் வழியாகத் தப்பிச் சென்றது தெரியவந்தது