​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழி கேட்பது போல் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷம்.. ஓட்டுநரை நையப்புடைத்த பொதுமக்கள்..!

Published : May 09, 2022 6:04 PM

வழி கேட்பது போல் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷம்.. ஓட்டுநரை நையப்புடைத்த பொதுமக்கள்..!

May 09, 2022 6:04 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேருந்து நிறுத்தத்தில் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் வழி கேட்பது போல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சரக்கு வாகன ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணிடம் அவ்வழியாக இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வாகன ஓட்டுநர், துவாரங்குறிச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டிருக்கிறான்.

அந்த பெண் வழி சொல்லி கொண்டிருந்த சமயத்தில் அந்த ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஓட்டுநரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அவனை துவைத்து எடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.