​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரியில் முன்விரோதத்தில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி.!

Published : May 09, 2022 4:28 PM



கிருஷ்ணகிரியில் முன்விரோதத்தில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி.!

May 09, 2022 4:28 PM

கிருஷ்ணகிரி அருகே முன்விரோதத்தில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி ஒருவன், அவர் காவல் நிலையத்தில் புகாரளித்ததால் போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அகில் என்ற ரௌடி, பர்கூர் ஜெகதேவி பகுதியில் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளான். அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான ராஜு என்பவர் அகிலைத் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அகிலின் கூட்டாளிகள் கடந்த 7ஆம் தேதி இரவு ராஜூ வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ராஜு போலீசில் புகாரளிக்கவே, ஆத்திரமடைந்த அகில், அவரை போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.