​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
6 மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிக்கப்பட்டனர்.. மயிலாப்பூர் இரட்டைக்கொலை - முதல்வர் விளக்கம்

Published : May 09, 2022 3:40 PM



6 மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிக்கப்பட்டனர்.. மயிலாப்பூர் இரட்டைக்கொலை - முதல்வர் விளக்கம்

May 09, 2022 3:40 PM

மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிக்கப்பட்டதாகவும், சிறப்பு தனிப்படை அமைத்து தேடிய நிலையில், ஆந்திர போலீசார் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், விசாரணைக் கைதிகள் விக்னேஷ் மற்றும் தங்கமணி மரணத்தில் சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடப்பதாக குறிப்பிட்டார்.

மாணவர்களிடம் குட்கா பயன்பாடு அதிகரித்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த அவர், இதுவரை 19 ஆயிரத்து 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், குட்கா பற்றி பேச அதிமுகவிற்கு தார்மீக உரிமையில்லை என்றும் கூறினார்.