​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர்களிடம் அத்துமீறினால் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என குறிப்பிடப்படும்-மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Published : May 09, 2022 3:21 PM

ஆசிரியர்களிடம் அத்துமீறினால் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என குறிப்பிடப்படும்-மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

May 09, 2022 3:21 PM

பள்ளிகளில் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் மாணவர்களின் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், வகுப்பறைகளில் செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் நிரந்தரமாக பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.