​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பயிலும் நிலை உள்ள பகுதியில் புதிய கல்லூரி அமைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி!

Published : May 09, 2022 12:32 PM

20 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பயிலும் நிலை உள்ள பகுதியில் புதிய கல்லூரி அமைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி!

May 09, 2022 12:32 PM

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடுகளை தவிர்க்க, நேரடியாக கலந்தாய்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.

மேலும், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்ற அமைச்சர் பொன்முடி, 20 கிலோ மீட்டருக்கு மேல் தூரமாக சென்று படிக்கும் மாணவர்கள் அருகிலேயே படிக்கும் வகையில் அந்தந்த பகுதிகளை தேர்வு செய்து புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.