​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானிலிருந்து பாக்கெட்டுகளுடன் பறந்து வந்த ட்ரோன்...சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை!

Published : May 09, 2022 12:21 PM

பாகிஸ்தானிலிருந்து பாக்கெட்டுகளுடன் பறந்து வந்த ட்ரோன்...சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை!

May 09, 2022 12:21 PM

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சர்வதேச எல்லை அருகே, பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அந்த டிரோனில் 10 கிலோ அளவிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா வழியே போதைப்பொருள் கடத்தல் கும்பல் இயங்கி வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் முயற்சி நடந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.