​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்மீகப் பெரியோரின் ஆவேசக் குரலுக்கு அரசு எதிர்வினை ஆற்றாது - அமைச்சர் சேகர்பாபு!

Published : May 09, 2022 11:58 AM

ஆன்மீகப் பெரியோரின் ஆவேசக் குரலுக்கு அரசு எதிர்வினை ஆற்றாது - அமைச்சர் சேகர்பாபு!

May 09, 2022 11:58 AM

ஆன்மீகப் பெரியோர்களின் ஆவேசக் குரலுக்கு அரசு எதிர்வினை ஆற்றாது என்றும், அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோவிலில் மண்டபம், குளம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, குளத்தைச் சீரமைக்க 70 இலட்ச ரூபாயும், மண்டபத்தைச் சீரமைக்க 25 இலட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.