​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பஞ்சாப்பில் 2.5 கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிப் பொருள்கள் பறிமுதல்...2 பேர் கைது.!

Published : May 09, 2022 7:45 AM

பஞ்சாப்பில் 2.5 கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிப் பொருள்கள் பறிமுதல்...2 பேர் கைது.!

May 09, 2022 7:45 AM

பஞ்சாப் போலீசார் தீவிரவாதத் தாக்குதல் சதியை முறியடித்து இரண்டு பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் இரண்டரை கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தார்ன் தரன் மாவட்ட கிராமம் ஒன்றில் டைமர் ,டெட்டோனேட்டர், ஆர்.டி.எக்ஸ் போன்றவற்றை ஒரு உலோகப் பெட்டியில் அடைத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.

பல்ஜிந்தர் சிங் மற்றும் ஜக்தார் சிங் ஆகிய இருவரின் செல்போன்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்