​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி.. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு..!

Published : May 09, 2022 7:18 AM

கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி.. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு..!

May 09, 2022 7:18 AM

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி நேரு பூங்காவில்  இரண்டு நாட்கள் நடைபெற்ற 11-வது காய்கறி கண்காட்சியை 12ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் 3 டன் காய்கறிகளால் உருவாக்கபட்டுள்ள காய்கறி நீருற்று, காய்கறி கோலம், காய்கறி கடிகாரம், காய்கறி மீன், கிட்டார் போன்றவை கண்களை கவரும் வகையில் இருந்தது.

விழுப்புரம் மாவட்டம் சார்பில் காய்கறிகளால் அமைக்க பட்டிருந்த கப்பல், வண்ண மீன்கள், டோரா புஜ்ஜி, காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் முள்ளங்கியால் அமைக்க பட்டிருந்த வரி குதிரை, திண்டுக்கல் மாவட்டம் சார்பில் அமைக்க பட்டிருந்த மிக்கி மவுஸ் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.