​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுத்துறையின் 3 காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனம்.!

Published : May 08, 2022 6:26 PM

பொதுத்துறையின் 3 காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனம்.!

May 08, 2022 6:26 PM

பொதுத்துறையைச் சேர்ந்த மூன்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அவற்றின் நிதிநிலையை வலுப்படுத்த மூவாயிரம் கோடி ரூபாய் முதல் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் மூலதனம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேசனல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குக் கடந்த நிதியாண்டில் கூடுதல் மூலதனமாக 9950 கோடி ரூபாயை அரசு வழங்கியது. இதுஅந்த நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல இது உதவும் என்றும் கூறப்படுகிறது.